**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

கார்ட்டூன்ஸ். PART 6.

>> Tuesday, November 12, 2013

ஆயிரம் வார்த்தைகளில் சொல்லும் செய்தியை "ஒரு படம் " விளக்கிவிடும். அந்த வகைய்ல் பேசும் கார்ட்டூன்ஸ்.

படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்

படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்

படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்


படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்
படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்
படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்


படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்

படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்

படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்
படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்

படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்


படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்

படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்
படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்
படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்
படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்
படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்
படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்
ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் என்னதான் ஹிந்து முஸ்லிம் கலவரத்தை தூண்ட முயற்சித்தாலும் பலிக்காது என்று கூறுகின்றனரோ இந்த இளம் பிஞ்சுகள்.


நன்றி: FACEBOOK.

***********************


தீவிரவாத ஒழிப்பா – முசுலீம் வேட்டையா ? - வினவு


தமிழகத்தில் மட்டுமல்ல, நாடெங்கும் நடந்துள்ள பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் போலீசு எடுத்திருக்கும் நடவடிக்கைகளைக் கீறிப் பார்த்தாலே, அதனின் புத்தியில் முசுலீம் வெறுப்பும் இந்து மதவெறிச் சார்பும் உறைந்து போயிருப்பதையும்; அறிவிக்கப்படாத ஆர்.எஸ்.எஸ். இன் அடியாளாக அத்துறை செயல்பட்டுவருவதையும் புரிந்துகொள்ளலாம்.

இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டிருப்பது தொடர்பாக தமிழக டி.ஜி.பி. 27.7.2013 அன்று வெளியிட்டிருந்த அறிக்கையில், ”பா.ஜ.க. மாநில மருத்துவ அணிச் செயலர் அரவிந்த் ரெட்டி கொலை, பணப்பரிமாற்றம் விவகாரம் தொடர்பாக நடந்தது. இவ்வழக்கில் வேலூரைச் சேர்ந்த வசூர் ராஜா உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டு, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செயப்பட்டுள்ளது.

பரமக்குடி நகர பா.ஜ.க. கவுன்சிலர் முருகன், சொத்து விற்பனை தொடர்பாக நடந்த தகராறில் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் நான்கு பேர் கைது செயப்பட்டுள்ளனர்” என விளக்கியிருந்தார்.

ஆனால், இதற்கு மாறாகத் தற்பொழுது அரவிந்த் ரெட்டி, முருகன் கொலைகளுக்கும் பக்ருதீனும் அவரது கூட்டாளிகளும்தான் காரணம் என போலீசு கூறுகிறது. இதில் எது உண்மை? எது பித்தலாட்டம்?

தமிழக போலீசால் கைது செய்யப்பட்டுள்ள (இடமிருந்து) பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன்


இம்மூவரையும் கைது செய்த பிறகோ, சமீபத்தில் நடந்த இந்து முன்னணி தலைவர்கள் கொலை வழக்குகள் அனைத்தையும் இந்த மூவரின் தலையில் கட்டிவிட்டது, தமிழக போலீசு. மேலும், இம்மூவரும் இந்து முன்னணியின் ராம.கோபாலன், தினமலர் அதிபர் கோபால்ஜி ஆகியோரைப் படுகொலை செய்யத் திட்டம் தீட்டியதாகவும்; சென்னையில் நடந்த திருப்பதி குடை ஊர்வலத்தைச் சீர்குலைக்கச் சதி செய்ததாகவும்; மோடியைக் கொல்ல நோட்டம் விட்டதாகவும் பீதி கிளப்பியிருக்கிறது, தமிழக போலீசு.

இதன் மூலம் தானே முன்வந்து போலீசிடம் சரணடைந்ததாகக் கூறப்படும் பக்ருதீனையும், கத்தியைத் தவிர வேறு ஆயுதங்கள் இல்லாத நிலையில் கைது செயப்பட்ட பிலால் மாலிக், பன்னா இஸ்மாயிலையும் மிகப்பெரிய தீவிரவாதக் கும்பலாகச் சித்திரிக்க முனைந்து வருகிறது.

ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அரசியல் நோக்கங்களுக்கு ஒத்தூதும் வேலையையும் தமிழக போலீசு கனகச்சிதமாகச் செய்து முடித்திருக்கிறது.

டெல்லி போலீசால் 20 பயங்கரவாத வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு, 14 ஆண்டு கால சிறைவாசத்திற்கு பிறகு, ”குற்றமற்றவர்; வழக்குகள் மோசடியானவை” எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள முகம்மது ஆமிர் கான்.


மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மோசடியாக சிக்கவைக்கப்பட்டு ஐந்தாண்டு சிறைவாசம் அனுபவித்த அப்பாவி முசுலீம்கள்.

”மாலேகான் குண்டுவெடிப்பை நாங்கள்தான் செய்தோம்” என ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த அசீமானந்தா.


• மகாராஷ்டிராவிலுள்ள மாலேகான் நகரிலும், ம.பி.யிலுள்ள அஜ்மீர் தர்காவிலும், சம்ஜௌதா விரைவு ரயிலிலும் நடந்த குண்டுவெடிப்புகளை ஆர்.எஸ்.எஸ். கும்பல்தான் நடத்தியது என்பது தற்பொழுது உறுதியாகி விட்டது.

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் கைது செயப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த அசீமானந்தா இதனை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

ஆனால், அக்குண்டுவெடிப்புகள் நடந்தவுடனேயே அதற்கான பழி கயமைத்தனமான முறையில் முசுலீம்கள் மீது சுமத்தப்பட்டு அப்பாவிகள் கைது செய்யப்பட்டனர்.

பாட்னா குண்டுவெடிப்பு : மேலும் ஒரு இந்து இளைஞர் கைது!

சமீபத்தில் மோடியின் கூட்டத்தில் பாட்னா குண்டுவெடிப்பில் தொடர்புடைய மேலும் ஒரு இளைஞரை பாட்னா காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞரின் பெயர் ராஜூ ஷா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாள்களுக்கு முன்பு, தேசிய புலனாய்வு முகவம் (NIA) ஆறு இந்து வாலிபர்களையும், அவர்களிடமிருந்த ஏராளமான வங்கிக் கணக்குப் புத்தகங்களையும், பண எடுப்பு அட்டைகளையும் கைப்பற்றியது. லக்கிஷராய் எனுமிடத்தில் பிடிபட்ட இந்த ஆறுவாலிபர்களுக்கும் அக்டோபர் 27 ஆம் தேதி சம்பவித்த பாட்னா குண்டுவெடிப்புக்கும் தொடர்புண்டு என்று தெரியவந்துள்ளது.

பாட்னா குண்டு வெடிப்பு நிகழ்த்திய‌ 'ஹிந்துத்துவா' தீவிரவாதிகள் குறித்து அரச பயங்கரவாதிகளும் ஊடக ஊதாரிகளும் வாய் திறக்க மறுக்கின்றனர்.


குண்டுவெடிப்பு வழக்குகளில் பொய் சாட்சிகளைத் தயாரித்து மோசடியாக வழக்குகளை நடத்தி வருவதற்கு, அப்பாவி முசுலீம்கள் சிக்க வைக்கப்பட்டிருப்பதற்கு, ஆர்.எஸ்.எஸ். கும்பல் நடத்திய குண்டுவெடிப்புகளுக்குக் கூட முசுலீம்கள் மீது பழி போட்ட கயமைத்தனத்திற்கு இன்னும் பல வழக்குகளை எடுத்துக் காட்டலாம்.

இந்த அத்துமீறல்கள் குறித்த விவாதம் கடந்த இருபது ஆண்டுகளாக இந்திய அரசியல் வெளியில் நடந்து வருகிறது.

இத்துனை ஆண்டுகளாக இது பற்றி வாயே திறக்காத காங்கிரசு கும்பல், இப்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், ”தீவிரவாத வழக்குகளில் அப்பாவி முசுலீம்கள் கைது செய்யப்படுவதை மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்; தவறு செய்யும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு, உப்புப் பெறாத கடிதமொன்றை மாநில அரசுகளுக்குத் தட்டிவிட்டிருக்கிறது.

அதேசமயம், இப்படியொரு சடங்குத்தனமாகக் கடிதத்தை அனுப்புவதைக்கூட இந்து மதவெறிக் கும்பல் விரும்பவில்லை.

”இவை முசுலீம்களை தாஜா செய்யும் நடவடிக்கை” என பா.ஜ.க. குதிக்கத் தொடங்கி விட்டது. இந்து மதவெறிக்கும் அரசு பயங்கரவாதத்துக்கும் இடையே மாட்டிக்கொண்டுள்ள முசுலீம் சமூகமோ அச்சத்துக்கிடையே வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறது. – செல்வம்.

வினவு ஆக்கம் சுருக்கப்பட்டுள்ளது . முழுதும் படிக்க‌

தீவிரவாத ஒழிப்பா – முசுலீம் வேட்டையா ?


***********************




***********************


***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும் >>>> *** இங்கே*** <<<<


**************************

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP